உலகம்

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டமைக்கு ட்ரம்ப் அதிருப்தி

ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு செல்லப்படுவதை ஈரான் கையாளும் விதம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

இரண்டு வார காலம் போர் நிறுத்தம் அமுலாகிய நிலையில், இஸ்ரேல் லெபனானில் தாக்குதல்களை நடத்தியது.

இந்த தாக்குதல்களை கண்டித்த ஈரான், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எரிபொருள் கப்பல் போக்குவரத்துக்கான அனுமதி மறுத்துள்ளதுடன் அந்த கடல்பகுதியையும் மூடியுள்ளது.

அதன் காரணமாக சர்வதேச சந்தையில் மீண்டும் மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தமது ட்ருத் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாவது,

ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் செல்வதை அனுமதிக்காது ஈரான் மிக மோசமான வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

சிலர் இதை கௌரவமற்றது என்று கூட சொல்லக்கூடும்.

இது நாம் செய்துகொண்ட ஒப்பந்தம் அல்ல என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *