உலகம்

ஈரானின் கார்க் தீவு மீது பலத்த தாக்குதல்

கார்க் தீவு பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் கார்க் தீவு பலத்த தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது என ஈரானிய மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீவு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையமாக விளங்குகிறது. போரின் ஆரம்பத்தில் அமெரிக்கா குறித்த தீவின் மீது குண்டுவீசியிருந்தது.

எனினும், ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பை அது பாதிக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அப்போது திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

ஈரானின் எண்ணெயைக் கட்டுப்படுத்துவதற்காக, அமெரிக்கா அந்தத் தீவைக் கைப்பற்றக்கூடும் என்று டிரம்ப் பல்வேறு சமயங்களில் அச்சுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *