உலகம்

ஈரானில் 6,000 இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்

ஆபரேஷன் Epic Fury நடவடிக்கையின்போது ஈரானில் சுமார் 6 ஆயிரம் இலக்குகள்மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் ஈரானின் போர்க்கப்பல்கள், ஏவுகணைத் தளங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி நிலையங்கள் போன்றவை பெருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டு இராணுவ நடவடிக்கைகளின் போது, ஒரு பாடசாலை தற்செயலாகத் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் இராணுவப் புலனாய்வாளர்கள் எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் அமெரிக்கா உள்ளக விசாரணையை முன்னெடுத்துவருகின்றது என தெரியவருகின்றது.

ஈரானின் இராணுவக் உள்கட்டமைப்பை முடக்குவதையே இந்தத் தீவிரமான தாக்குதல்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கட்டளை மையங்களும் இந்தத் தாக்குதலில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *