இன்று சர்வதேச மகளிர் தினம்

பெண்களின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் ரீதியான சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்குமான சர்வதேச மகளிர் தினம் இன்று (08) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இது வெறும் ஒரு கொண்டாட்டமாக மட்டுமன்றி, பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு உலகளாவிய இயக்கமாகவும் பார்க்கப்படுகிறது.
முதலாவது மகளிர் தினம் 1909 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவில் கொண்டாடப்பட்டுள்ளதுடன், 1910 ஆம் ஆண்டில் ஜேர்மனிய செயற்பாட்டாளரான கிளாரா ஜெட்கின் என்பவரால் இது சர்வதேச தினமாக முன்மொழியப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
பின்னர் 1975 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாக மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாகப் பெயரிடப்பட்டதாகவும் பதிவாகியுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தில் பிரதானமாக மூன்று நிறங்கள் பயன்படுத்தப்படுவதுடன், அது ஊதா, பச்சை மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களால் பிரதிபலிக்கப்படுகிறது.
ஊதா நிறம் நீதி மற்றும் கௌரவத்தையும், பச்சை நிறம் நம்பிக்கையையும் அடையாளப்படுத்துகிறது.
அதேபோன்று வெள்ளை நிறம் தூய்மையை அடையாளப்படுத்துவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
![]()