உலகம்

தாக்குதலால் அதிரும் உலகம்; போர் கப்பல்களை தாக்கும் ஏவுகணைகளை பரிசோதித்த கிம் ஜாங் உன்

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் கப்பல் ஏவுகணை சோதனையை மேற்பார்வை செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது,

வடகொரியாவின் நம்போ துறைமுக நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடலில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை கிம் மேற்பார்வையிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது,

கடலில் இருந்து தரைக்கு ஏவுகணைகளை ஏவுவதை கிம் மேற்பார்வையிட்டார். மேலும் இந்த சோதனையை புதிய போர்க்கப்பலின் திறன்களின் “முக்கிய” அங்கமாக மதிப்பிட்டார், இது தனது நாட்டிற்கான “கடல் பாதுகாப்பின் புதிய சின்னம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசும் போது, “இந்த வெற்றிகள் அனைத்தும் நமது கடல்சார் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஒரு தீவிர மாற்றத்தை உருவாக்குகின்றன, இவற்றை அரை நூற்றாண்டு காலமாக நாம் அடையாத ஒன்று,” என்று தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *