பலதும் பத்தும்

இந்தியா, அமெரிக்காவை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ஆப்டிக் கேபிள் திட்டம்!

டெல்லியில் இடம்பெறும் ஏஐ மாநாட்டின் 4 ஆவது நாளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சுந்தர் பிச்சை முக்கியப் பேச்சாளராக கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சுந்தர் பிச்சை பேசும் போது தெரிவித்ததாவது, ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் கூகுள் சார்பில் 15 பில்லியன் டொலர் முதலீட்டில் ஏஐ மையம் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஏராளமானோர் தொழில் வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

புதிய ஏஐ தொழில் நுட்பங்கள் உருவாகி, நாட்டின் தொழில் வளங்கள் மேலும் விரிவடையும் .இந்தியா, அமெரிக்காவை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ஆப்‌டிக் கேபிள் பதிக்கப்படவுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள், விவசாயிகள் போன்ற பலருக்கும் வானிலை முன்னறிவிப்பு சேவைகள் வழங்கப்பட முடியும்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப்பில் பணம் சம்பாதிக்க முடியுமென யாரும் நினைத்திருக்கவில்லை. இப்போது இலட்சக்கணக்கானோர் யூடியூப்பில் இலாபம் பெறுகிறார்கள்.

அதே நேரத்தில், ஏஐ தொழில் நுட்பம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இது தொழில் துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டார்.

கூகுளின் டீப் மைண்ட் நிறுவனம், ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் ஆல் பாபோல்ட் (AlphaFold) என்ற மொடலை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் புரொடீனின் 3டி வரைபடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மருத்துவத் துறையில் பெரிய புரட்சி ஏற்படுத்தி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் பயன்படும். ஏஐ தொழில்நுட்பங்கள் அறிவியல் துறையில் மிகவும் கடினமான பிரச்சினைகளுக்கு கூட தீர்வை வழங்கும் சக்தி கொண்டவை என மேலும் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *