இலங்கை

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு; 4 சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு 12 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் குறிப்பிட்டார்.

இந்தக் குற்றவாளிகள் பயணித்ததாகக் கூறப்படும் வாகனம் தீப்பற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இது தொடர்பாக இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை கிடைத்த பின்னரே நாம் இதனை உறுதிப்படுத்துவோம். இது 100 வீதம் அந்த வாகனம் தான் என்று எம்மால் கூற முடியாது.

இது தொடர்பாக நான்கு நபர்கள் குறித்து எமக்கு வெற்றிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் இதனைத் தீர்க்க முடியும் என நம்புகிறோம்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர். சட்டத்தரணி தொடர்பாக பொலிஸார் என்ற ரீதியில் நாம் எதனையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

சில விடயங்கள் ஊடகங்கள் வாயிலாகப் பிரச்சாரம் செய்யப்பட்டன. நாம் அந்தத் தகவல்களை 100 வீதம் அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை. இந்த விசாரணை நடவடிக்கைகள் மிகவும் நுணுக்கமானவை. தற்போது பெருமளவிலான பணிகள் நிறைவடைந்துள்ளன.

வெளியிடக்கூடிய விடயங்களை மாத்திரமே நான் வெளியிடுகிறேன். சில விடயங்களை வெளியிட்டால், அது விசாரணைக்குத் தடையாக அமையலாம்.

அவர் முன்னிலையான வழக்குகள் குறித்து நாம் விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் முடிவடைந்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட பின்னரே நாம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டியிருக்கும். என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *