உலகம்

சிட்னியில் களமிறங்கினார் இஸ்ரேல் ஜனாதிபதி: பாதுகாப்பு தீவிரம்!

இஸ்ரேல் ஜனாதிபதி Isaac Herzog ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று (09) காலை அவர் சிட்னி வந்தார்.

அவரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஜனாதிபதிக்கு எதிராக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் இஸ்ரேல் ஜனாதிபதியை வரவேற்பதற்காக நூற்றுக்கணக்கான யூத மக்கள் ஓன்று கூடியுள்ளனர்.

சிட்னியில் கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையிலேயே யூத சமூகத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸ்திரேலியா வந்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *