பலதும் பத்தும்
கரையொதிங்கிய மியன்மார் தெப்பம்

திருகோணமலை – ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைத்தோட்ட கடற்கரைப் பகுதியில் பௌத்த அடையாளங்களைக் கொண்ட தெப்பமொன்று புதன்கிழமை (14) அன்று கரை ஒதுங்கியுள்ளது.
இது மியன்மார் நாட்டில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இத்தெப்பம் பௌத்த அடையாளங்களைக் கொண்டு காணப்படுகின்றதுடன் பௌத்த பூஜை வழிபாடுகளின் பின் கடலில் விடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணையை ஈச்சலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![]()