உலகம்

வெனிசுவேலா நிலைமைகளை உன்னிப்பதாக அவதானிப்பதாக ஜார்ஜியா அறிவிப்பு

வெனிசுவேலாவில் உருவாகி வரும் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை நெருக்கமாக கண்காணித்து வருவதாக ஜார்ஜியா அரசு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெனிசுவேலா மக்களின் நலனுக்கே உரியதாக அமையும் என்ற நம்பிக்கையையும் அது வெளிப்படுத்தியுள்ளது.

ஜார்ஜியாவின் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெனிசுவேலா அதிகாரிகள் முன்னதாக ஜார்ஜியாவின் கைப்பற்றப்பட்ட பகுதிகளான அப்காசியா (Abkhazia) மற்றும் தென் ஒசெட்டியா (South Ossetia) ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தது, சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலை மாற்றங்கள், அந்த அங்கீகார முடிவை திரும்பப் பெறும் நிலைக்கு இட்டுச் செல்லும் என ஜார்ஜியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அத்தகைய மாற்றம், ஜார்ஜியாவின் தேசிய நலன்களுக்கும் சர்வதேச சட்டக் கோட்பாடுகளுக்கும் ஏற்ப அமையும் என்றும் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, ஜார்ஜியா அப்காசியா மற்றும் தென் ஒசெட்டியா பகுதிகளின் கட்டுப்பாட்டை இழந்தது.

இந்த இரண்டு பகுதிகளும் அதன்பின் நீண்ட காலமாக விவாதத்திற்குரிய பிரதேசங்களாக இருந்து வருகின்றன.

2008 ஆம் ஆண்டு, தென் ஒசெட்டியாவை மீண்டும் கைப்பற்ற முயன்ற ஜார்ஜியாவின் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, ரஷ்யா எதிர்தாக்குதல் நடத்தியது.

அந்த மோதலில், ரஷ்ய படைகள் குறுகிய காலத்திற்கு ஜார்ஜியப் பிரதேசத்திற்குள் நுழைந்து கட்டுப்பாட்டை ஏற்படுத்தின.

அதே ஆண்டு, ரஷ்யா அப்காசியா மற்றும் தென் ஒசெட்டியாவை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தது, இது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *