முச்சந்தி

முடிவுக்கு வருகிறதா இலங்கையின் இலவச கல்வி முறை?; மாணவர் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை எதிர்க்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த மாற்றங்கள் இலங்கையின் இலவச கல்வி முறையை அச்சுறுத்துவதாகவும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை ஓரங்கட்டக்கூடும் என்றும் மாணவர் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி பதாகையின் கீழ் ஊக்குவிக்கப்படும் கல்வி சீர்திருத்தங்கள், முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் கோத்தபய ராஜபக்ஷ ஆகியோரால் பின்பற்றப்பட்ட கொள்கைகளுடன் ஒத்துப் போகின்றன என்றும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

நவீனமயமாக்கல் மற்றும் மறுசீரமைப்பு என்ற போர்வையில் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அத்துடன், சீர்திருத்தங்களின் வெளிநாட்டு நிதியுதவி கூறுகள் குறித்தும் கூட்டமைப்பு கவலைகளை எழுப்பியது. கல்வி மறுசீரமைப்புடன் தொடர்புடைய திட்டங்களில் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இருப்பதாக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *