இலங்கை
தையிட்டி தமிழர்களின் சொத்து உடனே விடுவிக்கப்பட வேண்டும்; மக்களுக்காக போராடுவோம்

நாட்டில் மாறி மாறி வரும் அரசாங்கம் தற்போது வரை திட்டமிட்டே செயற்படுகின்றது. இதனை தமிழ்மக்கள் சிந்திக்க வேண்டும். தையிட்டி தமிழர்களின் சொத்து. மக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
இல்லையேல் மக்களுக்காகப் போராடி அவர்களுக்கு கரம் கொடுப்போம் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
![]()