கலாபூஷணம் திருமதி.கோகிலா மகேந்திரன் அகவை 75


நவம்பர் மாதம் 17 ஆம் திகதி நமது ஈழத்துப் பன்முகப் படைப்பாளி திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்கள் தனது 75 ஆவது அகவையில், பவள விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றார்.
அவரின் பவள விழா நிகழ்வுகள் டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நிகழ ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.ஈழத்துப் படைப்பாளிகளில், சமூக சிந்தனை கொண்ட களப் பணியாளராகத் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களின் செயற்பாடுகள் பன்முகப்பட்டவை. எழுத்தாளர் என்ற எல்லையைத் தாண்டி, உள வள ஆலோசகராக அவரின் பணி இன்னும் காத்திரமானது. தான் கொண்ட எழுத்துக் களத்தில் ஒரு எல்லைக்குள் நிற்காமல் பல்வேறு கூறுகளைத் தொட்டு அவரின் எழுத்துகள் பரந்து விரிந்தது போலவே அவரின் சமூக இயக்கமும் நிகழ்கிறது.
எழுத்துலகில் நாவல்கள், சிறுகதைகள், நாடகப் பிரதிகள், கட்டுரைத் தொகுப்புகள் என்று பரந்து விரிந்த இலக்கியச் செயற்பாட்டுக்காக அரச விருதுகள் பலவற்றைப் பெற்றிருக்கின்றார்.
மாணவ சமூகத்தை நாடகர்கள் மற்றும் சிறுகதை எழுத்தாளர்களாக உருவாக்கிய விதத்தில் இன்று பல்லாண்டுகள் கடந்தும் அவரின் ஆளுமைத் திறனை நன்றி பாராட்டுகிறார்கள்.
இந்த வேளை திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்களின் பன்முகப்பட்ட செயற்பாடுகளை நான்கு கூறுகளில் ஒலிப் பகிர்வுகளாக எடுத்திருந்தேன்.
அவற்றைக் கேட்க
எழுத்தாளர் லெ.முருகபூபதி
கிருஷ்ணானந்தன் (வளர் சஞ்சிகை ஆசிரியர்)
பேராசிரியர் பிரவீணன் மகேந்திரராஜா
நாடகமும் அரங்கியலும்” என்ற துறையில்
அவரின் ஆளுமைத் திறனை விபரிக்கிறார்
அவரது மாணவன் திரு.சதீஷ்பாலமுருகன் முருகையா
திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்களது சமூகப் பணி பல்லாண்டு காலம் நீடித்துத் தொடர வேண்டி வாழ்த்துவோம்.
![]()