உலகம்

ஈரானில் வரலாறு காணாத வறட்சி – தண்ணீர் விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள்

ஈரானில் வரலாறு காணாத கடுமையான வறட்சி நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், நாடு முழுவதும் தண்ணீருக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க ஈரான் தயாராகி வருகிறது.

தலைநகர் தெஹ்ரான் இந்த ஆண்டு மிகக் குறைந்த அளவே மழையைப் பதிவு செய்துள்ளது. நாட்டின் பாதி மாநிலங்களில், கடந்த சில மாதங்களாக மழையே இல்லாத நிலை என்ற நிலை நீடிக்கிறது.

மிக முக்கியமான நீர்த்தேக்கமான அமிர் கபீர் (Amir Kabir) அணையில், இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான அளவுக்கே பயன்படுத்தக்கூடிய நீர் இருப்பு உள்ளது.

இதன் விளைவாக, தெஹ்ரானின் சில பகுதிகளில் ஏற்கெனவே இரவு நேரங்களில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது.

தண்ணீர் விநியோகத்தில் ஏற்படும் இந்த இடையூறுகள் இருந்தாலும், தண்ணீர் விரயத்தைத் தடுப்பதற்கு இத்தகைய நடவடிக்கை அவசியம் என்று ஈரானிய எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விரைவில் மழை பெய்யாவிட்டால், நாட்டின் சில பகுதிகளில் உள்ள மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படலாம் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) எச்சரித்துள்ளார்.

எனினும், அத்தகைய இடப்பெயர்ச்சித் திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து அரசாங்கம் விரிவாக விவரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *