கவிதைகள்

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

தாய் எட்டடி பாய்ந்தால்
குட்டி பதினாறடி பாயும்
என்பது ஒரு பழமொழி
அனுபவம் தந்த மொழி

இவன் தந்தை என்னோற்றான்
கொல்லெனுஞ் சொல் என்பது
வந்தது எப்படி எனக் கேட்பின்
அது குறள்வழி கேட்ட மொழி

ராமன் வாழ்ந்ததோ தனிவழி
ஒருவனுக்கு ஒருத்தி என்ற வழி
அவன் தந்தை சென்றிடாத வழி
மந்திரமாக ஏற்க முடியாத வழி

சந்தேகம் போக்கவே எடுத்தவழி
சீதையை தீயில் இறங்க வைத்தவழி
மாயச் சீதையும் மறைந்தது எவ்வழி
அது துளசிதாசர் கண்ட மாயவழி

கைபற்றி சிறை எடுத்ததாக வான்மீகி
பூமியோடு பெயர்த்தெடுத்ததாக கம்பன்
மாயச் சீதை மறைந்ததாக துளசிதாசன்
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!

சங்கர சுப்பிரமணியன்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *