இந்தியா

கரூர் கூட்ட நெரிசல்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விஜய் வீடியோ அழைப்பு!

கடந்த மாதம் தமிழ்நாட்டின் கரூரில் நடந்த பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் காணொளி அழைப்புகள் மூலம் நேரில் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் இதுவரை 4–5 பேரிடம் பேசியுள்ளதாக விஜய் குழுவின் வட்டாரங்கள் தெரிவித்தன.

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் உட்பட 4–5 பேர் உயிரிழந்தனர்.

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய்யின் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமாக, செப்டம்பர் 27 சம்பவம் தொடர்பாக பாஜகவோ அல்லது ஆளும் திமுகவோ விஜய்யை வெளிப்படையாகத் தாக்கவில்லை.

இந்த நிலையில் காணொளி அழைப்பின் மூலமாக தற்சமயம் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளும் விஜய், விரைவில் நேரில் சென்று சந்திப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

ஒவ்வொரு அழைப்பும் சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்போது விஜய் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்ததோடு அவர்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார்.

சம்பவம் நடந்த மறுநாளே பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நடிகர் ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பல TVK நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்தாலும், விஜய்யின் பெயர் எந்த வழக்குப் பதிவிலும் குறிப்பிடப்படவில்லை.

கரூ கூட்ட நெரிசலுக்கு பல காரணிகள் காரணமாக இருந்தன.

10,000 பார்வையாளர்களுக்கு TVK-க்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் சுமார் 30,000 பேர் கூடியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனால், 500 பொலிஸார் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

விஜய் பேரணிக்கு வருவதில் ஏற்பட்ட தாமதம்தான் இந்த மிகப்பெரிய கூட்ட நெரிசலுக்குக் காரணமாக அமைந்தது.

முதலில் நண்பகல் 12 மணிக்குப் பேசுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த விஜய், மாலை 7-7.40 மணியளவில் வேலுசாமிபுரத்தை அடைந்தார்.

இருப்பினும், கடுமையான வெயிலுக்கு மத்தியில் காலை 9 மணி முதலே ஆதரவாளர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர்.

தண்ணீர் மற்றும் உணவு கிடைப்பது குறைவாக இருந்தது.

விஜய்யின் வருகைக்காகக் காத்திருந்தபோது குழந்தைகள் உட்பட பலர் மயக்கமடைந்தனர்.

இறுதியில் பலரது இறப்புக்கும் அது வழிவகுத்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *