டிசம்பர் 2008 முதல் மே 2009 வரை 140000 ஈழத் தமிழர்களை அரசு இனப் படுகொலை செய்தது; ஜெனீவாவில் சிறீதரன்

தமிழ் இனப் படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ் சிவில் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு ஐ.நா.சபையின் உறுப்பு நாடுகளிடம் யாழ்.மாவட்ட எம்.பி.சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆனணயகத்தின் கூட்டத் தொடரின் பக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் இங்கு மேலும் கூறுகையில்,
கடந்த 16 ஆண்டுகளாக இலங்கை தொடர்பான முக்கிய நாடுகள் குழு, இலங்கையை,முறையான மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் OHCHR வழிமுறைகளை முன்மொழிய வலியுறுத்த வேண்டும். அதாவது பேரவையின் நிகழ்ச்சி நிரல் 4 இன் கீழ் இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததுடன்.
மேலும் முன்னாள் OHCHR உயர் ஆணையர்கள் கோரியபடி இலங்கையை சர்வதேச நீதிமன்றத்துக்கு(ICC)க்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தார்.
அத்துடன் பின்வரும் விடையங்களையும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை சிங்கள அரசு டிசம்பர் 2008 முதல் மே 2009 வரை 140000 க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றதன் மூலம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்தது.
இந்த இனப்படுகொலைக்கு ஈழத் தமிழர்கள் சர்வதேச பாரபட்சமற்ற நீதியான விசாரணைகளை வழிமுறைகளைக் கோருகிறார்கள், கடந்த 16 ஆண்டுகளாக ஐ.சி.சி.யிடம் முறையிடுகிறார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கில் வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாள் இரண்டு நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக சர்வதேச நீதி கோரி பிரச்சாரம் செய்தனர். சர்வதேசம் கைவிடுவதாக உணர்வதால் அவர்கள் கோபமடைந்துள்ளனர், தமிழ் தாய்மார்கள் ஐ.நா.பேரவையின் வரைவுத் தீர்மானத்தையும் இலங்கை குறித்த உயர் ஆணையரின் கடைசி அறிக்கையையும் எரித்தனர்.
ஈழத் தமிழர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும் நிலைமாறுகால நீதியை மேம்படுத்துவதையும் உறுதி செய்வதற்கான நமது முயற்சிகளுக்கு ஆதரவாக, தமிழ் சிவில் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்க அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொள்கிறோம்.
அந்துடன் பொதுச் சபையின் 3வது குழு உறுப்பினர்கள் இலங்கையை ஐ.சி.சி.க்கு பரிந்துரைக்குமாறும், இலங்கை மீதான OHCHR விசாரணைக்கு நிதியுதவி அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
![]()