கவிதைகள்

வீரதுர்க்கை துதி விஜய தசமி வெற்றியின் நாளே!…. கவிதை… ஜெயராமசர்மா

வீரமும் விவேகமும் வித்தையும் இணையும்
தாரக மந்திரம் சக்தியே ஆகும்
வளமும் தருவாள் வாழ்வும் தருவாள்
மண்ணும் விண்ணும் நிறைவாள் சக்தி

ஒன்பது நாளும் ஒவ்வொரு படியாய்
உயர்ந்திடும் ராத்திரி நவராத் திரியாகும்
பத்தாம் நாளில் பக்குவம் பெறுவோம்
அத்தினம் சக்தியின் ஆற்றலாய் எழுந்திடும்

வெற்றி என்பது சக்தியே ஆகும்
வீரமும் சக்தியே ஈரமும் சக்தியே
செல்வம் கல்வி அனைத்தும் சக்தியே
அனைத்தும் அமைந்தால் வெற்றியின் விஜயமே

image0.jpeg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆணவம் இருந்தால் அனைத்தும் அழியும்
ஆணவம் என்பதை அழிப்பவள் சக்தியே
ஆணவ அரக்கனை அழித்திடு நாளாய்
அமைவதே விஜய தசமியின் தத்துவம்

செல்வமும் கல்வியும் வீரமும் நிறைந்தால்
உள்ளே ஆணவம் உருவாகத் தொடங்கும்
ஆணவம் எழுந்தால் அழிவே நிச்சயம்
அதுவே விஜய தசமியின் தத்துவம்

சக்தியால் கிடைக்கும் சக்திகள் யாவும்
சரியான வழியில் பயன்பட வேண்டும்
மற்றவர் அழிவை மனமதில் கொண்டால்
சக்தியால் தண்டனை கிடைத்தே தீரும்

ஒன்பது நாளும் உயர்வுடை நாளே
உள்ளம் உருகி வழிபடல் வேண்டும்
பக்தியின் மயமாய் சக்தியைப் போற்றினால்
வெற்றிகள் நிச்சயம் சக்தியே கொடுப்பாள்

உள்ளம் உருகினால் உவப்பாள் சக்தி
கள்ளம் நிறைந்தால் கடிவாள் சக்தி
அள்ளி அணைக்கும் சக்தியின் நாளே
வெற்றியாம் விஜய தசமியே ஆகும்

 

 

 

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

One Comment

  1. உள்ளம் உருகி வழிபடல் வேண்டும்
    பக்தியின் மயமாய் சக்தியைப் போற்றினால்
    வெற்றிகள் நிச்சயம் சக்தியே கொடுப்பாள்!
    அருமையான வரிகள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *