பலதும் பத்தும்

AI வரவு – 99% வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம்

ஏஐ வரவால் 2030ஆம் ஆண்டுக்குள் 99% வேலைவாய்ப்பு பறிபோகும் என அமெரிக்க பேராசிரியர் கணித்துள்ளார்.

அமெரிக்காவின் கென்டகியில் உள்ள லூயிஸ்வில்லி பல் கலைக்கழகத்தின் கணினி அறி வியல் பேராசிரியர் ரோமன் யம் போல்ஸ்கி கூறியதாவது:

உலகெங்கிலும் உள்ள நிறுவ னங்கள் செலவுகளை குறைத்து வருவாயை பெருக்க ஏஐ அமைப்பை விரைவாக செயல் படுத்தி வருகின்றன. இப்போது நாம் இதுவரை கண்டிராத வேலை யின்மை உலகை காண்கிறோம். 10 சதவீத வேலையின்மையை பற்றி நாம் பேசவில்லை. அனை வரையும் பயமுறுத்தும் 99 சத வீத வேலை இழப்பை பற்றி நாம் பேசுகிறோம்.

மனிதனைப் போன்ற நுண்ணறிவு அல்லது செயற்கை பொது நுண்ணறிவு (ஏஜிஐ) 2027-ம் ஆண்டுக்குள் பயன் பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. ஏஜிஜ வருகைக்கு மூன்று ஆண் டுகளுக்குப் பிறகு ஏஐ கருவி கள் மற்றும் மனித உருவ ரோபோக்களை பயன்படுத்துவ தால் தொழிலாளர் ச ளர் சந்தையில் 99% சதவீத வேலைவாய்ப்பு பறிபோய்விடும்.

அடுத்து, மனித ரோபோக்கள் 5 ஆண்டு பின்தங்கியிருக்கலாம். ஆனால், அடுத்த ஐந்து ஆண்டு களில் அனைத்து உடல் உழைப் பும் தானியங்கிமயமாக்கப்பட லாம். அப்போது நம்மிடம் மாற்றுத் திட்டங்கள் எதுவும் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button