உலகம்

காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு கனடா நிதியுதவி – உளவு அமைப்பு வெளியிட்ட தகவல்

கனடாவில் உள்ள பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் ஒருங்கிணைப்பு ஆகிய 02 காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கு கனடாவிலிருந்து நிதியுதவி சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

2025 ஆம் ஆண்டு கனடாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி இடர்பாடுகள் என்ற பெயரில் இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

கனடாவின் ஒட்டாவா உளவு அமைப்பு இந்தத் தகவலை அரசுக்கு அனுப்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கனடாவில் ஹமாஸ், காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களான பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் ஒருங்கிணைப்பு அமைப்பு போன்ற தீவிரவாத அமைப்புகள் நிதி உதவி பெறுவதை உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *