கோட்டா-மைத்ரி விரைவில் சிக்குவர்?; புதிய குற்றச்சாட்டுகள் தயாராகிறது

முன்னாள் ஜனாதிபதிகள் மைத்ரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரால் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பாக ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரான பல சிவில் சமூக அமைப்புகள் லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக் குழுவில் புகார் அளிக்கத் தயாராகி வருகின்றன.
இந்த அமைப்புகள் சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அனைத்து தொடர்புடைய தகவல்களையும் பெற்றுள்ளன. அந்தத் தகவலைப் பயன்படுத்தி தொடர்புடைய புகார்களை ஆணையத்தில் சமர்ப்பிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தற்போது வழக்கறிஞர்கள்,இவற்றுடன் தொடர்புடைய தகவல்களை பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.
அவற்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தனிப்பட்ட தலையீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல கட்டுமானங்களும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நில மீட்புக் கூட்டுத்தாபனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளும் அடங்கும்.
இது குறித்து கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,
இதுபோன்ற புகார்கள்,போதிய தகவலுடன் சமர்ப்பிக்கப்பட்டால், முறையான விசாரணைகளை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
இத்தகைய சட்டச் செயல்பாட்டில், சந்தேக நபர் வகித்த முந்தைய பதவிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படாதெனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
![]()