இலங்கை

பட்டலந்த, மத்திய வங்கிக்கு வரமாட்டோம்- ரணிலுக்கு எதிராக பேசும் மனோ

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது பட்டலந்த விவகாரம் அல்லது மத்திய வங்கி மோசடி குறித்தான குற்றச்சாட்டு எனில் அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்கப் போவதில்லையென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எனினும் இதுவொரு அரசியல் பழிவாங்கலாகும். இங்கிலாந்தின் பல்கலைக்கழகத்திலிருந்து ரணிலுக்கு இலங்கை தூதுவர் ஊடாக பெறப்பட்ட அழைப்பிதழை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு பழிவாங்குவது தவறு, ஜனாதிபதியானதன் பின்னர் அவர் செல்லும் பயணங்கள் அனைத்தும் உத்தியோகபூர்வமானவை, இப்பொழுது உள்ள ஜனாதிபதி அனுரவும் அவ்வாறே. அவருக்கும் அது பொருந்தும்.

இதன் காரணமாகவே நாம் இந்த விடயத்தில் முன்னிற்பதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இதனை புரிந்துகொள்ள வேண்டும். தவறான புரிதலால் இந்த பிரச்சினை ஏற்ப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணை இடம்பெறும் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *