இலங்கை

‘ஹர்த்தால்’ மூலம் மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைவு; தமிழரசுக் கட்சியின் ஏமாற்று வேலையென இளங்குமரன் கண்டனம்

மக்களை ஏமாற்றி, மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் முகமாக கதவடைப்புப் போராட்டம் போன்ற தேவையற்ற செயற்பாடுகளில், அரசியல் இலாபம் தேடும் சிலர் ஈடுபட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியினால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த இளங்குமரன் எம்.பி, அண்மையில் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். எமது அரசாங்கமானது சட்டம் ஒழுங்கினை சரியாக நிலைநாட்டி வருகின்றது. குறிப்பாக சட்டம் என்பது அனைவருக்கும் சமமான ஒன்று என குறுப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *