இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம் – எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த ரேணுகா பெரேரா இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.

சட்டத்தால் வழங்கப்பட்டபடி முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்து செய்வதற்கான இந்த மசோதாவை அரசாங்கம் கடந்த ஏழாம் திகதி நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இணைத்துள்ள மனுதாரர் கூறியுள்ளார்.

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் பிரிவுகள் 01 முதல் 04 வரை அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பிரிக்கும் கொள்கையை மீறுவதாகவும் என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தொடர்புடைய சட்டமூலத்தில் உள்ள பல பிரிவுகள் நாட்டின் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மக்களின் இறையாண்மையை மீறுவதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் பிரிவுகள் முழு அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளையும் மீறுவதாக அமைந்துள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே குறித்த சட்டமூலத்தில் உள்ள கேள்விக்குரிய பிரிவுகளை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தின் சிறப்பு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டு, வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை வெளியிடுமாறு மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *