இந்தியா

மணிப்பூரில் தொடர்ந்தும் ஜனாதிபதி ஆட்சியை நீடிக்க அனுமதி

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீடிப்பதற்கு இந்திய மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி ஆட்சி அமுல்ப்படுத்தப்பட்டது.

இதற்கு பாராளுமன்றம் ஏப்ரல் 2 ஆம் திகதி அனுமதி வழங்கியது. அதற்கமைய வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் ஓகஸ்ட் 13ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இதற்கிடையே, மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை நீடிக்க இந்திய மத்திய அரசு யோசனையை முன்வைத்தது.

இந்நிலையில், மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை நீடிப்பதற்கு மாநிலங்களவையில் பிரேரனை கொண்டு வரப்பட்டது.

குறித்த பிரேரனைக்கு மாநிலங்களவையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் தற்போது அமைதி ஏற்பட்டுள்ளதோடு, நிரந்தர அமைதியை ஏற்படுத்த இனக்குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *