இலங்கை

ஆன்மீகத்தின் அடையாளம் தமிழினம்! -யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பெருமிதம்!

தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்பது அரசியல் இல்லை, அது ஆத்மீகம் எனத் தெரிவித்த யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா தமிழன் ஆண்மீகத்தின் அடையாளம் எனவும் தெரிவித்துள்ளார்

‘சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்’ யாழ்.நாவற்குழி திருவாசக அரண்மனை வளாகத்தில்   திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்பது அரசியல் இல்லை.அது ஆத்மீகம் தமிழனுக்குத்தான் வேதம், சித்தாந்தம், திருமுறை இருக்கு.

வேதம் வழங்கும் அறிவு என்பார்கள் அந்தவகையில் மனிதப்பிறவி மிகவும் அருமையான பிறவி.திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது போல நாம் தேடுதல் ஆர்வம் உள்ள விதத்தில் செதுக்கப்ட்டுள்ளோம்.

வீடுபேறு அடையும் பட்சத்தில் நாம் எங்களை இறைவன் படைத்தது நன்றாக தமிழ் செய்யுமாறே என்று கூறியதற்கிணங்க சிவபூமி என்பது சிவாவயநம

சிவபூமியின் 8வது சிரசு யாழ்ப்பாணம் எனவும் தெரிவித்தார் இது பல அறிஞர்களை, சித்தர்களை பல முனிவர்களை கண்டிருக்கு அவ்வாறு பெருமைக்குரிய பூமி என தெரிவித்துள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *