முச்சந்தி

தழிழர்கள் செரிந்து வாழும் பகுதியில் தனி சிங்கள மொழியில் பெயர் பலகை-மக்கள் விசனம்

ஹட்டன் டிக்கோயா பார்த் போர்ட் எனும் பிரதேசத்தின் பாதை செப்பனிடும் பெயர் பலகை முழுமையாக தனி சிங்களத்தில் மாத்திரமே எழுதப்பட்டு தமிழ் மொழி புறக்கணிக்கபட்டுள்ளது.

தழிழர்கள் செரிந்து வாழும் ஹட்டன் பிரதேசங்களில் இவ்வாறான வேற்றுமை செயற்பாடுகள் பாரிய அசெளகரியத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

எட்டு பாராளுமன்ற உறுப்பினர் கெண்ட இம் மாவட்டதில் கடந்த காலங்களில் இவ்வாறான செயல்பாடுகள் இல்லை.

தற்போதைய அரசு ஏன் தமிழ் மொழியை புறக்கணிப்பு செய்கிறது என இப் பகுதியில் உள்ள மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி தமிழ் மொழியில் பெயர் பலகை இட வேண்டும் என மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button