இலங்கை

சஜித்தின் அழைப்பை ஏற்ற நாமல்!

எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பை ஏற்று, இன்று (17) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தாம் பங்கேற்பதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழு கூட்டத்திற்கு பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை கூறினார்.

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *