இலங்கை

அர்ச்சுனா எம்.பி.யை பதவியில் இருந்து தகுதி நீக்க கோரி மனு; நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவின் உறுப்பினர் பதவியை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதிப்படுத்த ஜூன் 26 ஆம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகளான மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்படி, உண்மைகளை உறுதிப்படுத்த, குறித்த மனுவை ஜூன் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

இந்த மனுவை சமூக ஆர்வலர் ஓஷலா ஹெராத் தாக்கல் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *