இலங்கை

சந்திரகாந்தன் பிறந்த மண்ணில் சிங்களத்துடன் கூத்தடிக்கின்ற சாணக்கியனுக்கு மாலை போட்டு வரவேற்பது வெக்க கேடானது!

ஜெசிக்குறு இராணுவ நடவடிக்கையினை முறியடித்து கதாநாயகனாக திகழ்ந்து தேசிய தலைவரால் பாராட்டப்பட்ட இந்த வீரம் செறிந்த மண்ணைச் சேர்ந்த சந்திரகாந்தன் மண்ணிலே எங்கேயே இருந்து வந்து தமிழர்களை காட்டி சிங்களத்துடன் சேர்ந்து கூத்தடிக்கின்ற சாணக்கியனுக்கு மாலை போட்டு வரவேற்பது வெக்க கேடானது அதேவேளை தமிழர்களின் உணர்வுகளையும் விடுதலைப் புலிகளின் தியாகங்களால் உருவாக்கப்பட்ட வீட்டில் நாகபாம்புகள் இருக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போரதீவுபற்று பிரதேச சபை தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் துப்பங்கேணி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் குமாரசிங்கம் ஆதரித்து   துரவணையடி ஊற்று பிரதேசத்தில் இடம்பெற்று கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் தமிழர்களை அடிமையாக்கி கொண்டிருக்கும் வேளையில் மறைந்த சம்மந்தனுக்கு கோடான கோடி மாளிகையும் குண்டு துளைக்காத வாகனமும் ஏன் கொடுக்கப்பட்டது என மக்களும் புத்திஜீவிகளும் நன்கு சிந்திக்கவேண்டும்

நீங்கள் அரசியலில் ஈடுபடாவிட்டால் உங்களை பிழையானவர்கள் ஆழக் கூடிய சூழ்நிலை ஏற்படும் அறிஞர் பிளட்டோ சொல்லுகின்றார்.

எனவே நாங்கள் 2009 பின்னர் எமது மக்கள்வீட்டுச் சின்னத்துக்கு நம்பி வாக்களித்தனர் அவர்கள் ஒரு கொள்கையும் இல்லாமல் இருந்த காரணத்தினால் இன்று ஜே.வி.பி வடக்கு கிழக்கில் முன்னிற்கின்றது.

இது யார்விட்ட தவறு தமிழர்கள் பிரிந்து நின்று எத்தனை கட்சியில் கேட்டால் நாங்கள் யாருக்கு போடுவது என மக்களிடம் இருந்துவரும் வார்தைகள் இதற்கு அடிப்படை காரணம் யார்? எந்த நோக்கத்துக்காக அந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதே அது சின்னாபின்னமாக சிதறடித்து கூட்டமைப்பு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் அந்த தமிழரசு கட்சி வீட்டுக்குள்ளே ஒரு நாக பாம்பு படுத்துகிடக்கின்றது

தமிழரசு கட்சிக்குள்ளே கள்ளவழியே வந்து எம். சுமந்திரன் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து வழி நடாத்துகின்றார்.

அவ்வாறே மட்டக்களப்பில் வந்தவர் 2009 முள்ளிவாய்கால் பேரழிவு நடக்கும் போது ராஜபக்ஷ குழுவுடன் கிரிபத் வெட்டி கொண்டாடியதுடன் சின்னவத்தையில் விகாரையை புனர் நிர்பானிப்பதற்கு அமைச்சரை அழைத்து விகாரை அமைத்தவர் தமிழரசு கட்சிக்குள் எப்படி வந்தவர் மக்கள் சிந்திக்கவேண்டும் வடக்கு கிழக்கில் ஏன் விகாரை அவரின் நோக்கம் என்ன?

தமிழர்கள் என்ன நோக்கத்துக்காக எதிர்த்து போராடினார்களே அந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்காக 2015 இருந்து 2019 வரைக்கும் நல்லாட்சி என்ற பேர்வையில் கொண்டுவரப்பட்ட அரசாங்கம் புதிய உருவாக்கிய ஏக்கிய இராஜ்யம் அரசியல் அமைப்பில் தற்போது வடக்கு மக்கள் திட்டமிட்டு தோற் கடிக்கப்பட்ட சுமந்திரன், சித்தாத்தன் உட்பட ஆறுபேர் இருந்தனர்

இவர்கள் தமிழர்களின் போராட்டத்தை மழுங்கடிக்க செய்து ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளும் விதமாக அந்த அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது இதன்போது எமது கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவரின் தலைமையில் வடக்கு கிழக்கிலே ‘எழுக தமிழா’ என மக்கள் அணியை திரட்டி அந்த அரசியல் அமைப்பை தோற்கடித்தோம்

இன்று பல பொய்களை கூறி வந்த என்.பி.பி ஜனாதிபதி அந்த கிடைப்பிலே கிடக்கும் புதிய அரசியல் அமைப்பை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார் இந்த நிலையில் பாராளுமன்றத்தில் உள்ள தமிழ்கட்சி எம்பிக்கள் 10 பேரும் சேர்ந்து அரசாங்கம் கொண்டுவரவுள்ள இந்த அரசியல் அமைப்பை தோற்கடிக்க ஒன்றிணைய பேச்சுவார்தையில் ஈடுபட்டோம் அதனை சுமந்திரன் தோற்கடித்தார்.

எனவே இந்த புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்ற துடித்துக் கொண்டிருப்பதுடன் அதற்காக தமிழரசுகட்சி வேகமாக ஓடுகின்றது எனவே இதில் விழிப்படையா விட்டால் நாங்கள் இந்த மண்ணிலே நிரந்தரமாக இரண்டாம் பிரைஜையாக வாழுவோம் எனவே மிக கவனமாக வாக்களிப்பு விடையத்தில் கவனம் செலுத்த வேண்டும.

தமிழர்களின் உணர்வுகளையும் விடுதலைப் புலிகளின் தியாகங்களையும் முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த வீடு அதில் இருக்கின்ற நாகபாம்புகள் எனவே இன்று இருக்கின்ற வீடு தமிழருக்கு உள்ளதல்ல இதனை மக்கள் விளங்கி கொள்ளவேண்டும். அதில் இருந்து பலர் எங்களுடன் இணைந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த உள்ளுராட்சி தேர்தல் முடிந்ததும் ஒற்றையாட்சி அரசாங்கத்தை தமிழ் மக்களின் விருப்பத்துடன் நிறை வேற்றுகின்ற செயற்பாட்டில் அரசாங்கம் செயற்படும் அதனை நாங்கள் எதிர்போம். வடக்கு கிழக்கு தமிழர்களின் தேசம் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் போல நிம்மதியாக வாழவேண்டும் அதற்கு சமஸ்டி ஆட்சியே தேவை.

வடகிழக்கை பிரித்ததுடன்; தமிழர்களுக்கு என்ன கொடுமைகள் செய்ய வேண்டுமே அந்த கொடுமையில் 50 வீதமாகன பங்கு ஜே.வி.பி செய்துள்ளனர். வரலாற்றை படியுங்கள எனவே சுமந்திரன் சாணக்கியன் போன்றவர்களின் சதி முயற்சியை தோற்கடிப்போம் தமிழரசு கட்சியினை தோற்கடிக்க வேண்டும்.

வீடு வீடு என்று சொல்லி உண்மையை அறியாமல் வாக்களிதீர்களானால் தமிழர்களுடைய இனம் உங்களுடைய பிள்ளைகளின் சந்ததி அழிந்து பௌத்தம் நிலைக்கும். பட்டிருப்பு தொகுதி தமிழ் தேசியத்துக்கான தொகுதி இந்த மண்ணில் ஏகப்பட்ட மாவீர்கள் தியாகம் செய்துள்ளனர். எனவே நாங்கள் உறுதியாக இருந்து தமிழன் தமிழனை ஆழவேண்டும்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ வெல்வதற்காக பண பரிமாற்றம் நடைபெற்றது அதில் சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 40 கோடி நிதியில் குளத்தில் மைதானம் அமைத்ததாக காட்டி பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குளத்தில் மைதானத்தை தேடுகின்ற சம்பவங்கள் ஊடகங்களில் பார்த்தோம் அவ்வாறே கட்டிடங்கள் கட்டி முடிக்காமல் முடிக்கப்பட்டதாக பணம் மோசடி இடம்பெற்றுள்ளது

எனவே எங்கேயே இருந்து வந்து கொண்டு தமிழர்களை நாங்கள் பெரிது நீங்கள் பெரிது என காட்டி ஏமாற்று வேலைகளை செய்பவர்களை நீங்கள் இனம் காணவேண்டும்.

படுவான்கரை மக்களை யாரும் நினைக்கலாம் நாங்கள் என்ன சொன்னாலும் செய்வார்கள் சாராயத்தை அரிசியை கொடுத்தால் வாக்களிப்பார்கள், என படுவான்கரை மக்களை வைத்து தீர்மானங்களை எடுக்கின்றனர்

ஒவ்வொரு தேர்தல் வரும் போது தேசிய கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த வேலைகளை செய்வார்கள் ஆனால் ஒரு விடையத்தில் உறுதியாக இருங்கள் எந்த தலைமைத்துவம் இந்த மண்ணிலே தமிழர்கள் நிம்மதியாக வாழவேண்டும் என யார் போராடுகின்றார்களே அவர்களை ஆதரியுங்கள் அது உங்கள் பிள்ளைகளுக்கு சேர்க்கின்ற சொத்து மாதிரி.

எனவே இந்த மண்ணிலே இங்கேயே இருந்து நீண்டகாலமாக நேர்மையாக செயற்படுகின்ற தமிழுக்காக பாடுபடுகின்றவர்களை நீங்கள் ஆதரிக்கவேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *