இலங்கை

மட்டு சீயோன் தேவாலயத்தில் 6 வது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்;த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) தேவாலயத்தின் முன்னால் உயிரிழந்தவர்களின் உறவுகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மெழுகுவர்தி ஏற்றி மலர் வைத்து மௌன அஞ்சலி செலுத்தியிருந்தனர்

அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிவதர்சன் தலைமையில் ஏற்பாட்டினையடுத்து குண்டுவெடிப்பில் உயிரிழந்து மற்றும் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு காலை 9.05 தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின்
திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி நிமிட அஞ்சலி மௌன செலுத்தினர்.

இந்த நினைவேந்தலையிட்டு அங்கு பலத்த பாதுக்கப்பு கடமையில் பொலிசார் விமானப்படையினர் ஈடுபட்டதுடன் இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *