இலங்கை

மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கு படகு சேவை – ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மன்னார் பகுதிகளில் மக்களின் கருத்துக்களை அறிந்து, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மன்னாரில் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தின் மக்களின் கருத்துகளை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் திட்டங்கள் முன்னெடுப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மன்னார் பஜார் பகுதியில்  இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னாரில் இருந்து தமிழ்நாடு, இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், அந்தத் திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. எதிர் காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், குறித்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் .

மேலும் எதிர்வரும் ஜூன் மாதம் முதல், மேலதிகமாக நான்கு லட்சம் பேருக்கு அஸ்வஸ்ய நிவாரணம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *