இலங்கை
யாழுக்கான கடற்றொழில் அமைச்சரா சந்திரசேகர்?; சுரேஷ் கேள்வி

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இலங்கையின் கடற்றொழில் அமைச்சரா அல்லது யாழ்ப்பாணத்தின் கடற்றொழில் அமைச்சரா என்பது குறித்து தனக்கு சந்தேகம் நிலவுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் முழு நடவடிக்கைகளும் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியே உள்ளது.
யாழ்ப்பாணம் கடற்றொழில் அமைச்சின் மையப்புள்ளியா அல்லது அதன் தலைமையகம் யாழ்ப்பாணத்தில் உள்ளதா என்பது குறித்தும் எனக்கு தெரியவில்லை.
அவர் யாழ்ப்பாணத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு அமைச்சராக இருந்தாலும் பரவாயில்லை. அவ்வாறு ஒரு விடயமும் இங்கு இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.