முச்சந்தி
சிறைக் கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதற்கு (open visit) என்னும் திட்டம் அறிமுகம்!

இச் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளுடன் புத்தாண்டை க் கொண்டாட பெருமளவிலான சிறைக் கைதிகளின் உறவினர்கள் வருகை தந்திருந்தனர்.
அத்துடன் சிறைச்சாலைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.