39 வயதுடைய பாட்டி…

நெட்டிசன்கள் “இந்த 39 வயதுடைய பாட்டி தனது பேரனுக்கு மாமா அல்லது அத்தையை பெற்றுக் கொடுக்க முடியும்” என்று கூறியுள்ளனர்
39 வயதில் ஒருவர் ஒரு மாத வயதுடைய ஆண் குழந்தைக்கு பாட்டியாகியுள்ளார். அவர் தனது பேரனுக்கு பாலூட்டும் புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. சிலருக்கு 39 வயதாகியும் திருமணம் நடைபெறாமல் உள்ள சூழலில் அதே வயதில் ஒருவர் பேரனை பெற்றெடுத்திருப்பது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த நபர் சீனாவின் அன்ஹு மாகாணத்தை சேர்ந்தவர். அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் நாள்தோறும் தன்னைப் பற்றியும் தனது பேரனை பற்றியும் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட பதிவில் பாட்டில் மூலமாக பேரனுக்கு அவர் பாலூட்டினார்.
மிகவும் இளமை தோற்றத்தில் காணப்பட்ட நபராக இருந்து அவரிடம் யூசர்கள், “அது உங்கள் மகனா?” என்று கேள்வி கேட்டனர். அதற்கு, “குழந்தை என்னுடைய பேரன்” என்று பதில் அளித்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். அந்த ஒரு மாத ஆண் குழந்தை இந்த பெண்ணுடைய மகளுக்கு பிறந்தது என்று தகவல்கள் கூறுகின்றன.
![]()