உலகம்
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்; பெண்கள், குழந்தைகள் உட்பட 24 பேர் பலி

காசாவுக்கு எதிரான முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18ஆம் திகதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 5 பேர் குழந்தைகள் என்றும், 12 பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.