இந்தியா

பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு விஜய்க்கு என்ன தகுதி உள்ளது; வீரலட்சுமி கேள்வி

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் குறித்து பேசுவதற்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு என்ன தகுதி உள்ளதென தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“நடிகர் விஜய் தலைமையில் கடந்த ஒரு வாரம் முன்பு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் தடுப்பு குறித்தும் பேசியிருந்தார்.

பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் குறித்தும் பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது.

சினிமா துறையைச் சேர்ந்த பாடகி சுசித்ரா உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்தார். விஜய் தனது இல்ல நிகழ்ச்சிகளில் சக நடிகர், நடிகைகளுக்கு வெள்ளி தாம்பூலத் தட்டில் விலை உயர்ந்த போதைப் பொருள் வைத்து வழங்குவார் என கூறினார்.

சுசித்ராவின் குற்றச்சாட்டிற்கு விஜய் அமைதியாக இருக்கிறார். பொலிஸாரும் விஜய் மீதும், நடிகை த்ரிஷா மீதும் விசாரணை நடத்தாதது ஏன்?

இப்படி ஒரு சூழலில் விஜய் கட்சி ஆரம்பித்து அரசியலுக்குள் பிரவேசித்து போதைப் பொருள் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது” என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *