இலங்கை

தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்தே உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்போம்

உள்ளுராட்சி சபைளில் ஆட்சி அமைக்கும் போது தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்தே ஆட்சி அமைப்போம் என தமிழரசுக் கட்சியின் எம்.பி.யான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா தெற்கு சிஙகள பிரதேச சபை தவிர்ந்த அனைத்து சபைகளிலும் வவுனியாவில் தமிழரசுக் கட்சி போட்டியிடுகிறது. எல்லா சபைகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்புகிறோம். எமது மாவட்டம் ஒரு எல்லைப்புற மாவட்டம். எமது மாவட்ட ஆட்சி அதிகாரம் எமது பூர்வீக இந்த மண்ணின் கட்சிகளுக்கு கிடைக்க வேண்டும். அந்த அடிப்படையில் இந்த மாவட்டத்தில் போட்டியிடுகின்றோம். இந்த மக்களின் தேவைகள பூர்த்தி செய்து அபிவிருத்தி நோக்கி நகர்வோம். அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளோம்.

எல்லா சபைகளிலும் தமிழ் தேசிய கட்சிகளுடன் சேர்ந்து பயணிக்க வாய்ப்புள்ளது. எமது மத்திய குழுவில் ஒரு சின்னத்தின் கீழ் சேர்ந்து பயணிப்பது முடியாத சந்தர்ப்பத்தில் ஆட்சி அமைக்கும் போது தமிழ் தேசியக் கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. இந்த தேர்தல் முறையில் தனிக் கட் சி ஆட்சி அமைக்க முடியாது.

சேர்ந்து பயணிக்கும் நிலைப்பாட்டில் இருந்து தமிழரசுக் கடசி விலகவில்லை. வவுனியா வடக்கில் சேர்ந்து போட்டியிடுவது தொடர்பில் பேசினோம். சில காரணங்களால் அது சரிவரவில்லை. ஆனால் நிச்சயமாக சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.