உலகம்

பாகிஸ்தான் இராணுவத் தொடரணியை குறிவைத்து தாக்குதல் – 90 பேர் உயிரிழந்ததாக தகவல்

பலுசிஸ்தானின் நௌஷ்கியில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் இராணுவத் தொடரணியை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு கொடிய சாலையோர குண்டுவெடிப்பில் குறைந்தது ஐந்து அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

எனினும், பலுச் விடுதலை இராணுவம் (BLA) இந்த தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டதாகவும், கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மாகாணத்தில் பதட்டங்கள் அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளது.

RCD நெடுஞ்சாலையில் உள்ள ரக்ஷன் மில் அருகே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தொடரணியில் இருந்த எட்டு பேருந்துகளில் ஒன்று முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

வெடிப்பைத் தொடர்ந்து, பலுச் விடுதலை இராணுவத்தின் ஃபதே படை மற்றொரு பேருந்தை சுற்றி வளைத்து உள்ளே இருந்த பாதுகாப்புப் பணியாளர்களைக் கொன்றதாக அதன் செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலோச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

பலுச் விடுதலை இராணுவம் என்பது பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் ஒரு இன-தேசியவாத போராளிக் குழுவாகும். இது 2000 களின் முற்பகுதியில் நிறுவப்பட்டதுடன் மிகவும் தீவிரமான பிரிவினைவாத குழுக்களில் ஒன்றாகும்.

இந்தக் குழு பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள், உள்கட்டமைப்பு மற்றும் அரசு நிறுவனங்கள் மீது ஏராளமான தாக்குதல்களை நடத்தியுள்ளது, இஸ்லாமாபாத் பலுசிஸ்தானின் இயற்கை வளங்களை சுரண்டுவதாகவும், உள்ளூர் மக்களை ஓரங்கட்டுவதாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மஜீத் படைப்பிரிவு அதன் தற்கொலைத் தாக்குதல் பிரிவாகும், இபாகிஸ்தான் பலுச் விடுதலை இராணுவத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது, மேலும் இது இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், பலுச் விடுதலை இராணுவம் தாம் சுயநிர்ணயத்திற்காகப் போராடுவதாக கூறும் அதேவேளை, சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தான் இராணுவ இலக்குகளுக்கு எதிராக பல உயர்மட்ட தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.

எவ்வாறாயினும், பலுச் விடுதலை இராணுவத்தின் மஜீத் படைப்பிரிவு,   தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது:

“தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக, பலுச் விடுதலை இராணுவத்தின் ஃபதேஹ் படை மற்றொரு பேருந்தை முற்றிலுமாகச் சுற்றி வளைத்து, பேருந்தில் இருந்த அனைத்து இராணுவ வீரர்களையும் கொன்றதாக கூறியுள்ளது.

இந்த தாக்குதலில் மொத்தம் 90 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.