இலங்கை

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த மற்றொரு அறிக்கை

ஐக்கிய இராச்சியம் தலைமையிலான பல நாடுகள் கூட்டாக இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் மற்றுமொரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது கூட்டத்தொடருடன் இணைந்து நேற்று (03) தொடர்புடைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய இராச்சியத்தைத் தவிர, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகியவை கூட்டாக இணைந்து தொடர்புடைய வாய்மொழி அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளன.

இந்த அறிக்கை கடந்த ஆண்டு நடைபெற்ற அமைதியான தேர்தல்களையும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் மதிப்பீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு சமூகங்கள் கடந்த காலத்தை நினைவுகூரும் வகையில் நினைவு விழாக்களை நடத்த அனுமதித்து, காணிகளை மீள கையளிக்க, நல்லிணக்கத்தை ஏற்படுத்த, சாலைத் தடைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம், மேலும் இந்தச் சட்டங்கள் சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க இருக்க வேண்டும் என்பதையும் குறித்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இதற்கிடையில், இலங்கை அரசாங்கம் நேற்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் வாய்மொழி அறிக்கையையும் சமர்ப்பித்தது.

இலங்கையில் புதிய அரசியல் கலாச்சாரம், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை உருவாக்க தற்போதைய அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்களை இந்த அறிக்கை வழங்கியுள்ளது.

மேலும், நாட்டின் அனைத்து குடிமக்களின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *