முச்சந்தி

வெளிநாட்டு பயணத்தின் போது எஞ்சிய பணத்தை மீள ஒப்படைத்த அமைச்சர்

தனது வெளிநாட்டுப் பயணத்தின் போது கூடுதல் செலவுகளுக்காக தனது அமைச்சகத்தால் வழங்கப்பட்ட பணத்தை அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் செலவிடாமல் மீள வழங்கியுள்ளார்.

இதன்படி, அவர் 240 அமெரிக்க டொலர்களை அமைச்சகத்தின் பொருளாளரிடம் மீள ஒப்படைத்துள்ளதுடன், அதற்கான பற்றுச்சீட்டையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இது இலங்கை பெறுமதியில் 69,960 ரூபாவாகும்.

கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் வெளிநாடு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button