இலங்கை

ஐ.ம.சக்தி செயற்குழு கூட்டத்திற்கு பின்னரே ரணில் – சஜித் சந்திப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையே மேலும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த விவாதங்கள் தொடர்பான இறுதி முடிவு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.

தொடர்புடைய கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற திட்டமிடப்பட்டிருந்தாலும், அன்று விடுமுறை நாள் என்பதால் அது நடத்தப்படவில்லை.

அதற்கமைய, குறித்த நிர்வாகக் குழு கூட்டம் எதிர்வரும் நாட்களில் நடைபெற உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை.

இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையே இறுதி உடன்பாடு ஏற்படாததால், இந்தக் கலந்துரையாடல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்வரும் தேர்தலில் கூட்டாகப் போட்டியிட்டால், அதிக அரசியல் நன்மைகளைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்குமென இரு தரப்பு உறுப்பினர்களும் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *