இலங்கை

நாட்டில் யுத்தம் இல்லை ஆயுதம் இல்லை; எனினும் பாதுகாப்புக்கே அதிக நிதி! சிறிதரன் எம்.பி சுட்டிக்காட்டு

நாட்டில் யுத்தம் இல்லை ஆயுதம் இல்லை எனினும் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்துக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

நாட்டின் பொருளாதாரம் மிளிரவேண்டுமெனில் நல்லிணக்கம் அவசியம்.

தூய்மையான இலங்கையை கட்டியெழுப்ப புலம்பெயர் மக்களை அழைக்க முன்னர் தமிழர்களின் பிரச்சினையை கவனம் செலுத்துங்கள். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுங்கள்

இனப்பிரச்சினை இலங்கையில் இருக்கின்றது என்பதை உணருங்கள். தமிழ் தேசிய இனத்திற்கு அங்கீகாரம் வழங்காத வரை பலனில்லை என அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *