மாவையின் இறுதி ஊர்வலம் – அரசியல் பிரமுகர்கள் பலர் பங்கேற்பு

உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்த தமிழரசுக் கட்சியின், மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின்   இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றது.

இன்று காலை 08.30 மணி முதல் சமயக் கிரியைகள் இடம்பெற்று பின்னர்  முக்கிய அரசியல்வாதிகளின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றது,

பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் மாவிட்டபுரத்தில் உள்ள வீட்டின் முன்றலில் வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்று முற்பகல் தகன நடவடிக்கைகளுக்காக அவரது உடல் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது.

இதன்போது, உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பெருமளவான பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மாவை சேனாதிராஜாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *