பலதும் பத்தும்

மேகாலயாவில் 35 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவம் திருட்டு!

மேகாலயாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து 35 முதல் 40 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவம் திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் மேகாலயாவின் தெற்கு காரோ மலைகளில் உள்ள டோலிக்ரே கிராமத்தில் ஒரு புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) அந்த இடத்தை ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தது. இந்த புதைபடிவம் திமிங்கலங்களின் முன்னோடிகளான அழிந்துபோன ரோடோசெட்டஸ் அல்லது அம்புலோசெட்டஸின் புதைபடிவமாக இருக்கலாம் என்று தெரிய வந்தது.

இந்த நிலையில் இந்த புதைபடிவத்தின் ஒரு பகுதியை யாரோ வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிஜு காவல்நிலைய பொலிஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். மேலும் அப் பகுதிக்கு பொது மக்கள் செல்லவும் தடை விதித்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக மேகாலயா கல்வி அமைச்சர் ரக்கம் சங்மா கருத்துத் தெரிவிக்கையில், ‘இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. புதைபடிவத்தின் ஒரு பகுதி வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த புதைபடிவம் நம் மாநிலம் மற்றும் நாட்டின் சொத்து. குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்வோம். இந்த இடத்தில் அருங்காட்சியகம் கட்டுவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வந்தது’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.