மெக்சிகோவில் சோகம்; மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழப்பு!

மெக்சிகோவிலுள்ள மதுபான விடுதியில் நேற்றைய தினம் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவின் தபஸ்கோ மாகாணத்தின் வில்லாஹெர்மோசா என்ற பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று குறித்த மதுபான விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததோடு 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், இதுகுறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *