கனடாவில் மீண்டும் குரங்கு அம்மை நோய்த் தாக்கம்

கனடாவில் மீண்டும் குரங்கு அம்மை நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடத்தில் கடந்த ஜூலை மாதம் வரையில் 93 பேர் குரங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே குரங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொருத்தமானவர்கள் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளுமாறும் அந்த நாட்டு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அந்த நாட்டு சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button