சாணக்கியன் மூளை இல்லாத அரசியல்வாதி; அமைச்சர் வியாழேந்திரன் சாடல்

தன் மீது சுமத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தாம் அரசியலில் இருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தன் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி அதனூடாக அரசியல் செய்து தன்மீது கறைபூச துடிப்பதாகவும் அமைச்சர் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது பிரத்தியேக செயலாளர் மற்றும் உதவியாளர் லஞ்ச ஊழல் அதிகாரிகளினால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லடி கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தனியார் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சாணக்கியன், தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளார்.

சம்பவம் நடந்த போது நான் அங்கு இருந்ததாகவும் லஞ்ச ஊழல் அதிகாரிகள் வந்தபோது அங்கிருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பி சென்றதாக பொய் குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளார்.

இதன்மூலம் சாணக்கியன் அரசியல் இலாபம் கான துடித்து வருகின்றார். அவ்வாறு தான் எவரிடமும் லஞ்சம் வாங்கவில்லை.

லஞ்ச ஊழல் ஆணைக் குழு அதிகாரிகள் கடமையில் இருக்கும்போது தான் அவ்விடத்தில் இருக்கவில்லை எனவும் தனது மெய்ப்பாதுகாவலர்கள் மூலம் அதனை நிரூபிக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது தான் இருந்ததை நிரூபித்து காட்டினால் தான் அரசியலில் இருந்து முற்றாக விடை பெறுகின்றேன்.

அவ்வாறு நிரூபிக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அரசியலில் இருந்து விடை பெறுவாரா? என பகிரங்க சவால் விடுப்பதாகவும் அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

பொய்களை மாத்திரம் கூறி அரசியல் செய்துவரும் சாணக்கியனுக்கு தன்னை பற்றி அவதூறு கூறுவதற்கு எந்த வகையிலும் தகுதி இல்லை எனவும் அவர் மூளை இல்லாத அரசியல்வாதி எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button