முச்சந்தி

வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சத்தியாக்கிரக போராட்டம்: பல்வேறு கோரிக்கைகளை முன்வைப்பு

வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் தமது சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 48 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டதோடு அரச தரப்போடு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வந்திருந்தனர்.

எனினும் அவர்களுடைய பேச்சுவார்த்தைகள் வெற்றி அளிக்காத நிலையில் 49 ஆவது நாளான இன்றிலிருந்து அவர்கள் வவுனியா பல்கலைக்கழக வாயிலில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக வாயிலில் கொட்டகை அமைத்து தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை காட்சிப்படுத்தியவாறு அவர்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Oruvan

strike

Oruvan

strike

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button