றீ(ச்)ஷா பண்ணையில் தமிழ் மக்கள் ஒன்றுகூடுவதற்கான அரிய வாய்ப்பு

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணையில் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு தொடர்ச்சியாக பல மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

இந்நிலையில் வரவிருக்கும் சித்திரை புத்தாண்டை, இம்மாதம் 14 ஆம் திகதி றீ(ச்)ஷா பண்ணையில் வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, முட்டி உடைத்தல், தாரா நடை,கயிறு இழுத்தல்,சாக்கோட்டம், பழம் பொறுக்குதல்,நீர் நிரப்புதல் மற்றும் கிளித்தட்டு போன்ற பல பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை கும்மி, கோலாட்டம் மற்றும் பரதம் போன்ற பாரம்பரிய கலைநிகழ்வுகளுடன் DJ இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது.

குறித்த தினத்தில் றீ(ச்)ஷா பண்ணைக்கு சென்று இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு அனைவரும் சித்திரை புத்தாண்டை சிறப்பாக கொண்டாடலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *